ஆப்நகரம்

எனது திட்டம் இது தான்: மனம் திறந்த ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே

நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே தனது திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்

Samayam Tamil 1 Jan 2020, 3:54 pm
டெல்லி: சீன எல்லையில் இந்திய ராணுவம் அதிக கவனம் செலுத்தும் என நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil மனோஜ் முகுந்த் நரவனே
மனோஜ் முகுந்த் நரவனே


முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை சில தினங்களுக்குமுன்னர் ஒப்புதல் அளித்தது. முப்படைகளின் சேவை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக முப்படைகளின் தலைமை தளபதி செயல்படுவார். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ராணுவ தலைமை தளபதியாக இருந்து நேற்றுடன் ஓய்வு பெற்ற பிபின் ராவத் பதவியேற்றுள்ளார். தொடர்ந்து நாட்டின் 28ஆவது ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய ராணுவத்திலிருந்து விடை பெற்றார் பிபின் ராவத்!

இதனைத்தொடர்ந்து, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மனோஜ் முகுந்த், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த சூழலிலும் நாட்டை காக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே தனது கடமை என்றார்.

முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்?

தமது பதவிக்காலத்தில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தெரிவித்த முகுந்த் நரவனே, மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம் அறிவுறுத்தப்படும் எனவும், சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி