ஆப்நகரம்

அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்து போன 100 பசு மாடுகள்- பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

கோசாலையில் இருந்த ஏராளமான மாடுகள், அடுத்தடுத்து இறந்து போன சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 11 Aug 2019, 9:40 am
ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கோட்டூர் தடையபள்ளியில் ’பசு பாதுகாப்பு இல்லம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கின்றன.
Samayam Tamil Cows


இவற்றிற்கு தேவையான உணவுகளை, ஊழியர்கள் அவ்வப்போது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று, மாடுகளுக்கு பசும்புல்லை தீவனமாக அளித்துள்ளனர்.

Also Read: நெகிழ்ச்சி சம்பவம்- வெள்ள மீட்பில் ராணுவ வீரர்களுக்கு இப்படியொரு மரியாதை செய்த பெண்!

இதனை சாப்பிட்டு பிறகு, மாடுகள் வித்தியாசமாக சத்தமிடத் தொடங்கின. இதையடுத்து ஒவ்வொரு மாடாக கீழே விழுந்தன. இதுகுறித்து உடனே கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கின. இவ்வாறு 100 பசு மாடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு!

இதுகுறித்து மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் கூறுகையில், இத்தனை மாடுகள் உயிரிழந்ததற்கு காரணம் தெரியவில்லை. என்ன பிரச்சனை என்று உடனடியாக கண்டறிய முடியவில்லை.

மாடுகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதன்பிறகே விவரம் என்னவென்று தெரியவரும் என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: Kerala Floods: டுவிட்டரில் டிரெண்டாகும் #VijayFansPrayingForKerala ஹேஷ்டேக்!

ஒருவேளை பசு மாடுகளுக்கு விஷ புல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பசுக்களை தெய்வமாக வழிபட்டு வரும் நமது மக்கள், இத்தனை மாடுகள் உயிரிழந்ததால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி