ஆப்நகரம்

மகாராஷ்டிர ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து- 12 பேர் பலி… பலர் படுகாயம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 58க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.

Samayam Tamil 31 Aug 2019, 2:17 pm
மகாராஷ்டிர மாநிலம், துலே பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளே பலரும் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
Samayam Tamil மகாராஷ்டிர ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து- 6 பேர் பலி… பலர் படுகாயம்!
மகாராஷ்டிர ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து- 6 பேர் பலி… பலர் படுகாயம்!


மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டம் ஷிர்பூர் பகுதியில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காலை 11 மணியளவில், ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் வெளியே வரமுடியாத வண்ணம் சிக்கிக் கொண்டனர்.


இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் தீ அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து உள்ளே சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று 2வது நாளாக டிகே சிவகுமாரிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி!!
வங்கிகள் இணைப்பு: மோசடி செய்த கோடீஸ்வரர்களைக் காப்பாற்றவா?

தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் துலே எஸ்.பி. விஷ்வாஸ் பந்த்ரே நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தீவிபத்தில் சிக்கி இதுவரை 12 தொழிலாளார்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 58க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறினார். இதனிடையே மேலும் பலர் தொழிற்சாலையினுள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

எச்சில் துப்பியவருக்கு தோப்புக்கரணம் போடும் தண்டனை - வைரலாகும் வீடியோ...!

அடுத்த செய்தி