ஆப்நகரம்

5 ஜவான்களை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட ஜவான்!

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் 5 பேரை சுட்டு கொலை செய்து விட்டார்.

Samayam Tamil 4 Dec 2019, 11:08 pm
சத்தீஸ்கரில் இந்தோ திபெத் ராணுவ வீரர்கள் 6 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil fafafafa


சத்தீஸ்கரில் பணியிலிருந்த இந்தோ திபெத் வீரர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் சிக்கி 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்குப் பின் தனது துப்பாக்கியை வைத்தே தன்னையும் சுட்டு கொண்டார். இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சூடானில் டேங்கர் வெடித்து விபத்து, 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலம், நாராயனபூரில் உள்ள இந்தோ திபெத் படை பாஸ்டர் பிரிவு பட்டாலியன் 45ல்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய வீரர் பெயர் ராமன் கான். இந்த சம்பவம் குறித்து

இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் டிஜிபி அஸ்வதி கூறுகையில், “5இந்தோ திபெத் வீரர்களைச் சுட்டுக் கொன்ற ஜவான், தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் காயமடைந்த 2 பேர் ராய்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. விரைவில் காரணம் வெளிவரும்.

கடத்தல் கும்பலுடன் மெக்சிகோ போலீஸ் சண்டை: 20 பேர் பலி

மன அழுத்தம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சத்தீஸ்கர் மாநில முதல் பூபேஷ், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க மாநிலம் முழுவதும் காவல் பணியிலிருப்பவர்கள் உளவியல் குறித்துக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி