ஆப்நகரம்

மாவோயிஸ்ட் மகாலிங்கம் கேரளாவில் கைது

மாவோயிஸட் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற மகாலிங்கம் என்பவரை கோவை காவல்துறையினர் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

TNN 25 Jul 2016, 10:10 pm
கோவை: மாவோயிஸட் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற மகாலிங்கம் என்பவரை கோவை காவல்துறையினர் கேரளாவில் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil maoist mahalingam arrested in kerala
மாவோயிஸ்ட் மகாலிங்கம் கேரளாவில் கைது


கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட் ஒருவரை கோவை கியூ பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.


தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு தேனி மாவட்டம் வரிசைநாடு மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்களிடம் ஆயுத பயிற்சியில் பெற்றதாக கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 2014ஆம் ஆண்டு நிபந்தனை ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் திடீரென தலைமறைவான அவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்தனர்.

தற்போது, கேரள மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற கோவை க்யூ பிரிவு காவல்துறையினர் மகாலிங்கத்தை கைது செய்துள்ளனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆண்டிப்பட்டி நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் மகாலிங்கத்தை ஆஜர்ப்படுத்தி, மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் சென்னை மற்றும் கரூரில் 3 பெண் மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி