ஆப்நகரம்

தலித் இளைஞரின் திருமண ஊர்வலத்தில் நடந்த கொடுமை

சவாய் ராமின் திருமண வைபவத்தை ஒட்டி திருமண ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அந்த பகுதியின் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் அந்த திருமணம் ஊர்வலத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 12 Feb 2019, 9:19 pm
ராஜஸ்தானில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு திருமண ஊர்வலம் நடத்தியதை தடுத்து நிறுத்தி தாக்குல் நடத்திய ஆசாமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 154997344350972


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள துகார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சவாய் ராம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

சில தினங்களுக்கு முன் நடந்த சவாய் ராமின் திருமண வைபவத்தை ஒட்டி திருமண ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அந்த பகுதியின் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் அந்த திருமணம் ஊர்வலத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஊர்வலம் நடத்தக் கூடாது எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதனை ஏற்காததால் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஊர்வலதைத் தடுத்து நிறுத்தி அடாவடி செய்தவர்கள் சிலரைக் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை விரைவில் கைது செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி