ஆப்நகரம்

பணத்தட்டுப்பாடு காரணமாக அதிக அளவில் நின்று போகும் திருமணங்கள்!

பணத்தட்டுப்பாடு காரணமாக அதிக அளவில் நின்று போகும் திருமணங்கள்!

TOI Contributor 21 Nov 2016, 10:13 pm
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் பணத்தட்டுப்பாடு காரணமாக 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil marriages stopped due to currency banned
பணத்தட்டுப்பாடு காரணமாக அதிக அளவில் நின்று போகும் திருமணங்கள்!


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். வங்கி மற்றும் ஏடிஎம் வாசலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யலாம் என்று சொல்லப்பட்டாலும், நடுத்தர வர்க்கத்து மக்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் பணம் இல்லாததால் நின்று போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் தடை அறிவிக்கப்பட்ட போது திருமண ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். ஆனால் கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் ரூ.500 கோடி செலவில் தன் மகளின் திருமணத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி