ஆப்நகரம்

வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 21 Feb 2019, 12:41 pm
வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil fire accident


வங்கதேசத்தில் தலைநகர் தாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரசாயான பொருட்கள் இருக்கும் குடோன் இயங்கி வந்துள்ளது. இந்த குடோனில் ஏற்பட்ட தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியுள்ளது. இதில், கிட்டத்தட்ட 56 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 12 பேர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேற முடியாமல் தீ விபத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தீயணைப்புதுறை முதன்மை அதிகாரி அனில் அகமது கூறுகையில், தாக்காவில் மிகவும் பழமை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சாக்பஜார். இந்த குடியிருப்பில் இருந்து கசிந்த கேஸ் சிலிண்டரின் கேஸ், ரசாயன பொருட்கள் இருக்கும் குடோனில் பட்டதே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தாக்கா துணை ஆணையர் இப்ராஹீம் கான் கூறுகையில், இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள் ரிக்‌ஷாக்களும் சேதமடைந்துள்ளன. விபத்தில் பலியானோர் அருகில் இருந்த ஹோட்டல்களில் உணவருந்திக்கொண்டிந்தவர்கள் என்றும், திருமண விருந்தில் கலந்து கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து மற்றொரு தீயணைப்பு வீரர் கூறுகையில், புதன்கிழமை இரவு 10.40 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட 200க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.

இந்த நிலையில், தாக்கா மருத்துவ கல்லூரி மருத்துமனையில் போலீஸ் அதிகாரி கூறுகையில், இந்த தீ விபத்தில் 45 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக இதே போன்று கடந்த 2010ம் ஆண்டும் தாக்காவின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 120 பேர் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி