ஆப்நகரம்

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட கமாண்டர் அதிரடி கைது!

லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டராக இருந்த ஜாகி உர் ரகுமான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 2 Jan 2021, 4:26 pm
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஜாகி உர் ரகுமான் லக்வி. இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஆபரேஷன் கமாண்டராக இருந்து வருகிறார். இவருடைய வயது 61. மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட லக்வி, கடந்த 2015ஆம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
Samayam Tamil Lakhvi Arrest


உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பண உதவி செய்தல், திட்டம் தீட்டுதல், குற்றவாளிகள் தங்க இடமளித்தல் போன்ற செயல்களில் லக்விக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் லக்வியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசம்; சூப்பர் அறிவிப்பு!
இந்த சூழலில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு (CTD) காவல்நிலையத்தில் லக்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத தடுப்பு துறையினரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து CTD அதிகாரிகள் கூறுகையில், பல்வேறு வகைகளில் நிதி திரட்டி அதனை பயங்கரவாத செயல்களுக்கு லக்வி அளித்து வந்துள்ளார். மேலும் தனது சொந்த பயன்பாட்டிற்காகவும் செலவழித்துள்ளார்.

தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கும் செல்வராகவன்
இதுதொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் தற்போது கைது நடவடிக்கையை மேற்கொண்டோம். இவர் மீதான வழக்கு விசாரணை லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி