ஆப்நகரம்

அவங்க கஷ்டத்துக்கு இவங்க தான் காரணம்: ஆண்ட கட்சி, ஆளும் கட்சியை போட்டுத் தாக்கும் மாயாவதி!!

கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று வேலையிழந்து தவிப்பதற்கு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தான் காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 24 May 2020, 9:48 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கு காங்கிரஸும் , பாஜகவும் தான் காரணம்.
Samayam Tamil maya


காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அக்கட்சியின் ஆட்சிக் காலங்களில் தான் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.அதன் காரணமாக தான் இன்று அந்த தொழிலாளர்கள் இன்று இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதேபோன்று, இரண்டு மாதங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி பொதுமுடக்கத்தை அறிவிக்கும் முன்பே, பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அவகாசம் அளித்திருக்க வேண்டும்.

குர்கான் டூ பீகார்: காயமுற்ற தந்தையை சுமந்து 1,200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த அதிசய சிறுமி!!

அப்படி செய்திருந்தால் இன்று அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இன்றைய நிலைக்கு காங்கிரஸும், பாஜகவும் தான் காரணம். அதே சமயத்தில், அரசு உதவி கிடைக்காமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பகுஜன் சமாஜ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்று மாயாவதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி