ஆப்நகரம்

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பங்களாவை காலி செய்தாா் மாயாவதி

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வா் மாயாவதி தான் வசித்து வந்த அரசு பங்களாவை இன்று மாலை காலி செய்தாா்.

Samayam Tamil 2 Jun 2018, 10:14 pm
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வா் மாயாவதி தான் வசித்து வந்த அரசு பங்களாவை இன்று மாலை காலி செய்தாா்.
Samayam Tamil Mayawati


உத்தரபிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வா்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கும் சட்டத்தை அமல் படுத்தியது. இந்த சட்டத்தை கடந்த மே 7ம் தேதி உச்சநீதிமன்றம் தரத்து செய்தது. இதனைத் தொடா்ந்து அம்மாநில முன்னாள் முதல்வா்கள் 15 நாட்கள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல் அமைச்சா் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோா் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனா். இதற்கு மாநில அரசு பதில் அளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோாிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.

அரசு பதவிகளில் இல்லாதவா்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து அகிலோஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோா் தங்களது அரசு வீடுகளை இன்று காலை செய்தனா். மிக முக்கியமான பிரமுகா்கள் தங்கும் அரசு விருந்தினா் விடுதியில் அவா்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் முதல் அமைச்சா் மாயாவதியும் அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினாா். அந்த வீட்டை மறைந்த தலைவா் கன்சிராமின் நினைவு இல்லமாக ஆக்கிவிட்டதாக முன்னா் குறிப்பிட்டிருந்த மாயாவதி, அங்கிருந்து வெளியேறியதற்கான கடிதத்தை நினைவு இல்ல பொறுப்பாளரிடம் அளித்தாா். அந்த வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு இனி மாநில அரசை சோ்ந்தது என தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி