ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் கைது: இலங்கையுடன் இந்தியா பேச்சுவார்த்தை!

தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Samayam Tamil 17 Dec 2020, 11:29 pm
தமிழகத்தை சேர்ந்த 36 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்தது. அவர்களுடைய படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர்.
Samayam Tamil Representational image


தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 மீனவர்களை டிசம்பர் 14ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நமது மீனவர்களின் படகுகளை விடுவிக்காத இலங்கை கடற்படையின் யுக்தி தமிழக மீனவர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துகிறது.

எனவே, 36 இந்திய மீனவர்கள் மற்றும் 5 இயந்திர படகுகளை விடுவிப்பதற்காக இலங்கையின் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் குறுக்கிட்டு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மீனவர்கள் விடுதலை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “டிசம்பர் 14, 15 தேதிகளில் 36 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து ஐந்து மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்களை கண்டோம்.

ராஜேஷ் படத்தின் அடுத்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ்

இதுகுறித்து தமிழக அரசிடம் இருந்தும் தகவல் வந்துள்ளது. இவ்விவகாரத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மீனவர்களையும், படகுகளையும் விரைவில் மீட்பதற்காக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி