ஆப்நகரம்

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமிகளின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிடக்கூடாது: உச்சநீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின், மார்பிங்க செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Aug 2018, 12:06 pm
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின், மார்பிங்க செய்யப்பட்ட புகைப்படங்களைவெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம்தெரிவித்துள்ளது.
Samayam Tamil crime-story-fb_647_053016125601.


பீகார் மாநிலம் உள்ள முசாபர்நகரில் நகரில் அரசு நிதியுதவியில் இயங்கும் காப்பகத்தில் இருந்த சிறுமிகள் 30க்கும் மேற்பட்டோர் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகளிடம் ஊடகங்கள் நேர்காணல் செய்து, அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை ஒளிபரப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாட்னாவைச்சேர்ந்த சமூகநல ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லொகுர்,தீபக் குப்தா ஆகியோர், இந்த சம்பவம் தொடர்பாக பீகார் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் என்று தெரிந்தும் அவர்களிடம்நேர்கணல் செய்த ஊடகத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.சிறுமிகளின் அடையாளங்களை வெளியிடும் எந்த முயற்சியும்ஊடகம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தாய்லாந்து குகையில்மாட்டிக்கொண்ட சிறுவர்கள் மற்றும் கால்ந்துபந்து பயிற்சியாளர்களை மீட்கும் வரையில் அவர்களை பற்றிய எந்த விவரத்தையும் ஊடங்கள் வெளியிடவில்லை. இதுபோன்ற உதாரணங்கள் இருக்கும்போது, ஊடங்கள் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டசிறுமிகளிடம் நேர்காணல் நடத்துவது முறையான செயலா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் 18 வயதுக்கு உற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அவர்களது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை கூட ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி