ஆப்நகரம்

தீபாவளி பரிசு தயார்... 3 ஆவது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை

மேட்டூர் அணை 3 ஆவது முறையாக தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Samayam Tamil 22 Oct 2019, 10:33 pm
இந்த ஆண்டில் மட்டும் மேட்டூர் அணை 3 ஆவது முறையாக தன் முழு கொள்ளளவை எட்டவு ள்ளது.
Samayam Tamil mettur dam reach its apex level thrice this year
தீபாவளி பரிசு தயார்... 3 ஆவது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை


மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா மற்றும் கேரள் மாநில நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஆகஸ்டு மாதத்தின் இறுதியில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் நிரம்பின.

இந்த அணைகளில் இருந்து சுமார் மூன்று லட்சம் (3,00,000) கனஅடிக்கு மேலான உபரி நீர் இந்த் ஆண்டு திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணைக்கு வந்த இந்த தண்ணீரால் இந்த ஆண்டு முதல் முறையாக செப்டம்பர் மாதம் 7-ம் தேதி மேட்டூர் அணை தன்முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் 2 ஆவது முறையாக அதே மாதம் (செப்டம்பர் ) 24-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

கடந்த 16 -ம் தேதி அணைக்கு நீர்வரத்து ஆறு ஆயிரத்து 594 (6594 கன அடி/ விநாடி) கனஅடியாக சரிந்து விட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.06 அடியாக தொடர்ந்து வந்தது.

மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியதால் நீர் வரத்து படிப் படியாக அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி 34 ஆயிரத்து 722 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் காரணமாக மீண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் கணிசமாக உயர ஆரம்பித்தது.

நேற்றுவரை (22 . 10 . 19 ) 16 ஆயிரத்து 229 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில்,அணையின் நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாகவே உள்ளதால் நீர்மட்டம் உயர்வது தொடர்ந்து வருகிறது. இதனால் நேற்று 117 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 118.6 அடியாக உயர்ந்தது. இந்த வார இறுதிக்குள் முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி