ஆப்நகரம்

ஊருக்கு போக யாருக்கெல்லாம் அனுமதி: மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் விளக்கம்

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகருவது தொடர்பான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது

Samayam Tamil 3 May 2020, 9:44 pm
டெல்லி: கொரோனா பொது முடக்க காலத்தில் சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பொதுமக்களின் நகர்வுகள் தொடர்பான விளக்கத்தை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் நாடு முழுவதும் பிரிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு, சில தளர்வுகளையும் அளித்துள்ளது.

குறிப்பாக, பொது முடக்கத்தினால் ஏதோ ஒரு இடத்தில் சிக்கி தவிப்பவர்கள் தங்ளது சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், இடம் பெயர்ந்த தொழிலாளார்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயில் என்ற பெயரில் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிக்க உரிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா: உலகிலேயே நம்ம நாட்டுலதான் உயிரிழப்பு குறைவு!

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, பாதிப்புகளுக்கு ஏற்ப மாநிலங்களும் பொது மக்களின் நகர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எனினும், அதில் தெளிவற்ற நிலை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பொதுமக்களின் நகர்வுகள் தொடர்பான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அளித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் விளக்கம்


அதன்படி, ஊரடங்குக்கு முன்னர் சொந்த ஊர்களில் இருந்தோ, பணியிடங்களில் இருந்தோ வேறு இடத்துக்கு சென்று சிக்கியவர்கள் மீண்டும் அவர்களது இருப்பிடத்துக்கு வரும் பொருட்டு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு சில காரணங்களுக்காக சொந்த ஊர்களில் இருந்து வேறு ஊர்களில் இருக்கும் நபர்களின் நகர்வுகளுக்கு அனுமதி கிடையாது. அவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி