ஆப்நகரம்

பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன் ரெட்டி கைது

பணமோசடி வழக்கில் முன்னாள் பா.ஜ.க. அமைச்சா் ஜனாா்த்தன் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா்.

Samayam Tamil 11 Nov 2018, 2:11 pm
பணமோசடி வழக்கில் முன்னாள் பா.ஜ.க. அமைச்சா் ஜனாா்த்தன் ரெட்டி, அவரது உதவியாளா் அலிகானை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா்.
Samayam Tamil Janardhan Reddy


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆம்பிடென்ட் என்ற தனியார் நிதிநிறுவனம், கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியது. இது குறித்து அமலாக்கத்துறையினர் ஆம்பிடென்ட் நிறுவன உரிமையாளர் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களையும் முடக்கியது.

அப்போது பாஜக அமைச்சராக இருந்த ஜனார்த்தன் அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து பரீத்தை காப்பாற்றுவதற்காக உறுதியளித்தார். மேலும், இடைத்தரகர் அலிகார் மூலம் 57 கிலோ தங்கத்தை பரீத்திடம் முதற்கட்டமாக இருந்து ஜனார்த்தன் பெற்றார். இதன் மதிப்பு சுமார் 18 கோடி ரூபாயாகும்.இதையடுத்து இடைத்தரகர் அலிகாரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜனார்த்தனை தேடி வந்தனர்.

ஜனாா்த்தன் ரெட்டிக்கு முன்ஜாமீன் கோரப்பட்ட நிலையில் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தொிவித்தது. இந்நிலையில் ஜனாத்தன் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினா் பெங்களூருவில் இன்று கைது செய்துள்ளனா். மேலும் அவரது உதவியாளரான அலிகானையும் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

அடுத்த செய்தி