ஆப்நகரம்

ஹெல்மெட்டை இப்படி மறந்துட்டீங்களே- வசமாக சிக்கிய அமைச்சருக்கு இவ்வளவு தான் அபராதம்!

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி அமைச்சர் ஒருவர் சிக்கிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 6 Sep 2019, 8:08 am
ராஜஸ்தான் மாநில சுரங்கத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பிரமோத் ஜெயின் பையா. இவர் கடந்த 3ஆம் தேதி, பாரன் மாவட்டத்தின் பிரதாப் சவுக் பகுதியில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றுள்ளார்.
Samayam Tamil Rajasthan Minister


அப்போது போக்குவரத்து விதிமுறைகளின் படி, ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை. இதைக் கண்ட காவலர்கள், உடனே அவரைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்திற்காக, ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

திகார் சிறையில் சிதம்பரம் 2 வாரங்களுக்கு அடைப்பு!!

இதுதொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி, நாடு முழுவதும் மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது.

இதன்படி, விதிமீறலில் ஈடுபட்ட அமைச்சருக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஹலோ நான் லண்டன்ல இருக்கேன்..! சென்னையில் இருந்தே பெற்றோரை ஏமாத்திய மகன்

இதனால் பழைய விதிமுறைகளே பின்பற்றப் பட்டு வருகிறது. இந்த சூழலில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லாத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு தொடக்கத்தில் குறைந்த அபராதமே விதிக்கப்படும். படிப்படியாக அபராதம் கடுமை ஆக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கனமழையால் தத்தளிக்கும் மும்பை..! இயல்புநிலை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை

அடுத்த செய்தி