ஆப்நகரம்

சாரி லேட்டா வந்துட்டேன்; இந்தாங்க ரூ.50 லட்சம் - ஆச்சரியப்படுத்திய மாநில அமைச்சர்!

விழா ஒன்றிற்கு தாமதமாக வந்த காரணத்தால், தனக்கு தானே அமைச்சர் ஒருவர் அபராதம் விதித்துக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Nov 2019, 9:27 am
தெலங்கானா மாநிலத்தை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார். இவரது சகோதரி மகன் ஹரீஷ் ராவ். இவர் அம்மாநிலத்தின் நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
Samayam Tamil Harish Rao


ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானாவை தனியாக பிரிக்க வேண்டும். தெலங்கானா மக்களுக்கு போதிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் ஹரீஷ் ராவ்.

வழக்கறிஞர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! டெல்லியில் பரபரப்பு..

இவர் சந்திரசேகர ராவிற்கு பக்க பலமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து புதிதாக அமைந்த தெலங்கானா மாநிலத்தில் இருமுறை அமைச்சர் பதவி வழங்கபட்டுள்ளது.

சமீபத்தில் சித்திபேட்டா மாவட்டம் துப்பாக்கா நகராட்சியில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் விழா நேரம் தொடங்கி நீண்ட நேரமாகியும் அமைச்சர் வரவில்லை.

குடித்து விட்டு வருகிறார்... பல ஆண்களிடம் உறவு வைக்க வேண்டும்... கேப்டன் மனைவியின் குமுறல்..!

இதையடுத்து தாமதமாக விழாவிற்கு வந்த ஹரீஷ் ராவ், அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தனக்குத் தானே அபராதம் விதித்துக் கொண்டார். அது கொஞ்ச நஞ்சமல்ல.

ரூ.50 லட்சம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம். அப்படித்தான் செய்தார். இதனை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில் மேடையிலேயே அறிவித்தார்.

இந்த தொகையை கொண்டு மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

கடித்தால் ஒரு நொடியில் மரணம்..!! 15 அடி ராஜ நாகத்திற்கு முத்தம் கொடுத்து அனுப்பிய ''ப்ரேவ் மேன்''..

அடுத்த செய்தி