ஆப்நகரம்

உரி தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், தளபதி தல்பீர் சிங் ஸ்ரீநகர் விரைந்தனர்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் பலியானர். தாக்குதல் நடந்த இடத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

TNN 18 Sep 2016, 3:08 pm
ஸ்ரீநகர் : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் பலியானர். தாக்குதல் நடந்த இடத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Samayam Tamil minister parikar dalbir singh rush srinagar
உரி தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், தளபதி தல்பீர் சிங் ஸ்ரீநகர் விரைந்தனர்


ஜம்மு-காஷ்மீர், உரியில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதனால் எல்லைப் பகுதியில் கடும் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர்.

காஷ்மீரின், பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் 4 தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ராணுவத்தினர் சார்பாக பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நடத்திய 4 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தப்பட்டடு. இருப்பினும் இந்திய பேரிழப்பாக ராணுவ வீரர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த செய்தி