ஆப்நகரம்

இது நல்லதுக்கில்ல பாத்துக்குங்க... ஃபேஸ்புக் ஓனருக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை கடிதம்!!

பிரதமர் நரேந்திர மோடி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் பணியை ஃபேஸ்புக் நிறுவனம் செய்து வருகிறது என்று அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 1 Sep 2020, 9:13 pm
"ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இந்த நிறுவனங்களுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள தொடர்பு இதன் மூலம் வெளிவுலகிற்கு தெரிய வந்துள்ளது.
Samayam Tamil mark


இந்தியாவின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த வெளிநாட்டு நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்களை இந்தியாவுடன் தொடர்புப்படுத்தி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பதிவில் இன்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதுக்கு பேரு தான் ’டிஜிட்டல் ஸ்டிரைக்’ - அற்புதமாக விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர்!

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இன்று பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தியாவில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில், ஃபேஸ்புக்கை சமூக விரோத சக்திகள் மிகவும் திறம்பட பயன்படுத்தி வருகின்றன. சமூக ஒற்றுமையை சீர்குலைக்க அவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள ஆயுதமாக ஃபேஸ்புக்கை கருதி செயல்பட்டு வருகின்றனர்.

அதேசமயம், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது, வலதுசாரி சிந்தனை கொண்டவர்களின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டன அல்லது அவர்களின் கருத்துரிமை பிறருக்கு சென்றடையாதபடி தடுக்கப்பட்டன. ஃபேஸ்புக் நிறுவனம் இவ்வாறு பாரபட்சமாக செயல்பட்டதற்கு வலுவான ஆதரங்கள் உள்ளன.

அத்துடன், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சில பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையின் மீது அவதூறு பரப்பும் விஷமத்தனமான வேலையை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

தனிமனிதர்களின் அரசியல் ந
ம்பிக்கைகளை சீர்குலைக்கும் விதத்தில், பாரபட்சத்துடன் இவ்வாறு அவதூறுகளை பரப்பிவருவது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின் அரசியல் விவகாரங்களில் எந்தவிதத்திலும் ஃபேஸ்புக் நிறுவனத பணியாளர்கள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது.

விரும்பதகாத இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் உங்கள் நிறுவன பணியாளர்களுக்கு அமைச்சர் என்ற முறையில் கண்டங்களை கூறிக் கொள்கிறேன் என்று தமது கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி