ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

Samayam Tamil 25 May 2018, 4:40 pm
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil harshvardhan


மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் இப்போது தான் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளேன். எனக்கு தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் குறித்த முழு விபரங்கள் தெரியாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரழந்த சம்பபவம் துரதிர்ஷ்டவசமானது. தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து இனி தான் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு சுற்றுச்சுழல் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். ஆலையை அமைக்கப்பட்டதில் ஏதும் முறைகேடுகள் நடைபெற்றதா, துறை ரீதியாலான விசாரணையும் நடத்தப்படும். ஸ்டெர்லைட் ஆலை நடத்துவதற்கான அனுமதியை முந்தைய அரசு தான் வழங்கியுள்ளது. அந்த அனுமதி விபங்கரங்களையும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி