ஆப்நகரம்

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பணியாளர்கள் ஓரிருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், உடனே அலுவலகத்தை மூடிவிட வேண்டுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 1:58 am
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
Samayam Tamil sop


இந்த நிலையில், பணியிடங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (containment zones) மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பணிகள் சார்ந்த அலுவலகங்களை தவிர, பிற பணிகள் சார்ந்த நிறுவனங்களை திறக்கக் கூடாது.

ஆஃபீசில் கலெக்டர் சார் செஞ்ச வேலைய பாருங்க மக்களே!!

கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோரை தொடர்ந்து வீட்டில் இருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.

பணியாளர்கள், அலுவலத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் உடல் வெப்பநிலையை சோதித்த பின்பே (தெர்மல் ஸ்கேனிங்) அலுவலத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

பணியாளர்கள் அனைவரும் தங்களது மொபைல்ஃபோனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதை நிறுவனங்களின் நிர்வாகம் உறுதி செய் ய வேண்டும்.

பணியாளர்கள் ஓரிவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், அதற்காக உடனே ஒட்டுமொத்த அலுவலகத்தை மூட வேண்டுமென்றோ, அலுவலகத்தின் பிற பகுதிகளில் பணிகளை நிறுத்த வேண்டும் என்றோ அவசியமில்லை.

குறிப்பிட்ட பணியாளர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன், 48 மணி நேரத்தில் அவர் பணிபுரிந்த அலுவலக வளாகத்தில் மட்டும் கிருமி நீக்கம் (disinfection procedure) செய்ய வேண்டும்.

அதேசமயம், ஒரு அலுவலத்தில் நிறைய பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த அலுவலகம் முழுவதும் குறைந்தப்பட்சம் 48 மணிநேரத்துக்கு மூடப்பட வேண்டும்.

தொடர்ந்து, கிருமி நீக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின், இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகுதான் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அதுவரை அனைத்துப் பணியாளர்களும் கட்டாயம் வீட்டில் இருந்துதான் பணிபுரிய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தலை சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி