ஆப்நகரம்

Plastic Flags: பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது: மத்திய அரசு!

சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Aug 2018, 11:17 am
Samayam Tamil 2
டெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக பொதுமக்கள் பிளாஸ்டிக் தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘72வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்.

அதற்கு மாற்றாக காகித தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டும். தவிர, தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் பயன்படுத்த வேண்டும் .’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி