ஆப்நகரம்

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்து

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, நிலவும் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு மத்திய சாலைகள் போக்குவரத்துத் துறை பதிலளித்துள்ளது

Samayam Tamil 25 Mar 2020, 10:56 pm
டெல்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனால், மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி எனவும், இதர வாகனங்களை இயக்க தடை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அரசு உத்தரவுப்படி வழக்குகள் பதிவு செய்யபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுங்ககட்டணம் ரத்து


இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை சுட்டிக்காட்டி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக மத்திய சாலைகள் போக்குவரத்துத் துறைக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.


இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, நிலவும் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு மத்திய சாலைகள் போக்குவரத்துத் துறை பதிலளித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்பதால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி