ஆப்நகரம்

சட்னி மியூசிக் டூ ஆட்சி அதிகாரம் வரை - கைலாசா தீவை கலக்கும் மிஸ்ஸிங் சிஸ்டர்ஸ்!

அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட சகோதரிகள் கைலாசாவில் சட்னி மியூசிக் கற்றுக் கொண்டு ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 2 Jul 2020, 1:40 pm
இந்தியாவில் பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். அவர் கடந்தாண்டின் இறுதியில் டிரினிடாட் மற்றும் டுபாகோ அருகே உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அதற்கு ‘கைலாசா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அங்கிருந்த படியே அவ்வப்போது இணையத்தில் வீடியோ மூலம் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். முன்னதாக அகமதாபாத் ஆசிரமத்தில் 2015ஆம் ஆண்டு முதல் இரண்டு சகோதரிகள் நித்யானந்தாவின் சீடர்களாக சேர்ந்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் நித்யானந்தா உடன் உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக கூறப்பட்டது.
Samayam Tamil Missing Sisters in Kailaasa


இந்த சூழலில் இரண்டு பெண்களின் தந்தை குஜராத் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது இரு மகள்களையும் காணவில்லை. உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும். சாமியார் நித்யானந்தா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 2019ல் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதிர்ச்சியூட்டும் குழந்தைகள் மரணம் - என்ன காரணம்? எச்சரிக்கை மணி அடித்த புள்ளிவிவரம்!

அந்த சமயத்தில் தான் நித்யானந்தாவும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. அப்போது கர்நாடகாவில் நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தனது மகள்களை காணவில்லை என்று புகார் அளித்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஹதிஜன் ஆசிரமத்தில் இருந்து தனது மகள்களை மீட்டு தர வேண்டும் என்று புகார் தெரிவித்திருந்தார். அதன்படி இரண்டு மைனர் மகள்களை போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். ஆனால் மற்ற இரண்டு மகள்களைக் காணவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து தான் சம்பந்தப்பட்ட நபர் உயர் நீதிமன்றம் வரை சென்றார்.

இதுதொடர்பாக நேற்று விளக்கமளித்த குஜராத் போலீஸ், காணாமல் போன இரண்டு பெண்களும் கைலாசாவில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு அவர்கள் சட்னி மியூசிக் உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். கைலாசாவின் உள்நாட்டு விவகாரங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

’சூப்பர் ஸ்பிரெட்டர்’ ஆன திருமணம்; ஒரேநாளில் புதுமாப்பிள்ளை பலி - 100 பேருக்கு கொரோனா!

நித்யானந்தாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பெறுவதில் இன்னும் எங்களால் வெற்றி காண முடியவில்லை. அரசியல் ரீதியாக எந்த நாட்டுடன் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று மத்திய அரசு தெளிவற்ற தன்மையில் இருக்கிறது. இதனால் இரு சகோதரிகளையும் மீட்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி