ஆப்நகரம்

இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பை மேம்படுத்த உதவும் ’மிஷன் ஷக்தி’

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா செயற்கைகோளை பாதுகாக்க ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. அதாவது இந்திய செயற்கைக் கோள் வானில் வலம்வரும்போது அந்நிய செயற்கைக்கோள்கள் அதனை அழிக்க வந்தால் அவற்றைத் தாக்க இந்த ஏவுகணைகள் பயன்படும்.

Samayam Tamil 27 Mar 2019, 4:52 pm
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா செயற்கைகோளை பாதுகாக்க ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. அதாவது இந்திய செயற்கைக் கோள் வானில் வலம்வரும்போது அந்நிய செயற்கைக்கோள்கள் அதனை அழிக்க வந்தால் அவற்றைத் தாக்க இந்த ஏவுகணைகள் பயன்படும்.
Samayam Tamil satellite


விஞ்வெளி சூப்பர் பவர் நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்து சாதனை படைக்க முதல் படியாக இது விளங்கும் என கூறப்படுகிறது.

தேசத்தின் பயணத்தில் சில தருணங்கள் அதீத பெருமையையும் வருகாலத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும் தடத்தையும் உருவாக்கும். அந்த மாதிரியான தருணம் இன்று நிகழ்ந்துள்ளது என பிரதமர் மோடி வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். இந்த மிஷனுக்குப் பெயர் மிஷன் ஷக்தி. ஆண்டி- சாட்டிலைட் மிசைல் எனப்படும் அந்த பாதுகாப்பு ஏவுகணை இந்திய செயற்கைகோள் பாதுகாப்புக்கு உதவும்.

பாதுகாப்பு ஏவுகணை காலை 11. 16 மணியளவில் ஏவப்பட்டது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. மூன்றே நிமிடங்களில் செயற்கை கோள் தாக்கி அழிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இந்திய விண்வெளிப் பாதுகாப்பை பலப்படுத்த இந்த ஆராய்ச்சி உதவும் என்றார் மோடி.

மோடியின் இந்த முயற்சியை அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது மோடி வான் நோக்கி கை காட்டி பூமியில் உள்ள பிரச்னைகளை மறக்கடிக்கப் பார்க்கிறார் என கூறியுள்ளார்.

மோடியின் இந்த முயற்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி