ஆப்நகரம்

கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: சாதனை படைத்த மாநிலம்!

கொரோனா உயிரிழப்புகளே இல்லாத மாநிலமாக மிசோரம் உருவெடுத்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2020, 11:21 pm

கடந்த சுமார் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே பெரும் அவதியில் தள்ளியிருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 79.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Mizoram


இந்நிலையில், கொரோனாவால் இதுவரை உயிரிழப்புகளே ஏற்படாத மாநிலம் என்ற பெயரை மிசோரம் தட்டிச்சென்றுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிசோரம் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்: மத்திய அரசு சட்டத்திருத்தம்!

கொரோனா தடுப்பு முயற்சிகளுக்காக சுகாதார துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்களுடன் அவசர கூட்டத்திற்கு பின்னர் மிசோரம் அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் விழிப்புணர்வு செயல்பாடுகள், மக்களின் நடமாட்டத்தை குறைத்தல், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துதல் போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டபின் திறக்கப்பட்ட 10ஆம், 12ஆம் வகுப்புகள் இப்போது மீண்டும் முடப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்காக தனி பாதுகாப்பு மையங்கள் அமைக்க மிசோரம் அரசு முடிவு செய்துள்ளது.

மிசோரமில் இதுவரை மொத்தம் 2,527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 2,212 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிசோரம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி