ஆப்நகரம்

#MeToo: எம்ஜே அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு- அக்.31 ஆம் தேதி விசாரணை!!

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணை, அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2018, 4:18 pm
பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் தொடுத்துள்ள அவதூறு வழக்கின் விசாரணை, அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil எம்ஜே அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு- அக்.31 ஆம் தேதி விசாரணை!!
எம்ஜே அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு- அக்.31 ஆம் தேதி விசாரணை!!


சமீபகாலமாக பெண்களின் #MeToo இயக்கம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில், பிரபல சினிமா நடிகைகளும், பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதில், பாஜகவின் அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராக இருந்த எம்ஜே. அக்பர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரியா ரமணி என்ற பெண் பத்திரிக்கையாளர் புகார் கூறினார். அவரைத் தொடர்ந்து, மேலும் சில பெண்கள் அவர் மீது பாலியல் புகார்களை சுமத்தினர்.

இதைத்தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என பலரும் வலியறுத்தியதால், ஆளும் பாஜக கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய்யானவை என கூறி, தன்மீது பாலியல் புகார் சுமத்தியவர்கள் மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அக்பர் சார்பாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் கீதா லுத்ரா,, “40 ஆண்டுகளாக அக்பர் கட்டமைத்த பெயருக்கு, திருப்பி சரிசெய்ய முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். இதனால் அவர் தனது பதவியையே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31 ஆம் தேதி தள்ளி வைத்தார். மேலும், அந்நாளில் எம்ஜே அக்பர் மற்றும் மற்ற சாட்சியங்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலங்களை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி