ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. பிளவுபட்ட ஆந்திர மாநிலத்தின் 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளைக் கைப்பற்றி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கைப்பற்றினார்.
இதையடுத்து ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழா விஜயவாடா உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நேற்று நண்பகல் 12.23 மணிக்கு, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் வருவார் என்று வாழ்த்து தெரிவித்தார். இதைக் கேட்ட ஸ்டாலின், வெட்கத்தில் முகம் சிவந்தார். மேலும் உற்சாகத்தில் புத்துணர்ச்சி உடன் காணப்பட்டார்.
இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இதையடுத்து ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழா விஜயவாடா உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நேற்று நண்பகல் 12.23 மணிக்கு, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் வருவார் என்று வாழ்த்து தெரிவித்தார். இதைக் கேட்ட ஸ்டாலின், வெட்கத்தில் முகம் சிவந்தார். மேலும் உற்சாகத்தில் புத்துணர்ச்சி உடன் காணப்பட்டார்.
இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.