ஆப்நகரம்

அடிபட்டு உயிருக்கு போராடியவரை அப்படியே வேடிக்கை பார்த்த மக்கள்..!

ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் எம்எல்ஏ ஸ்ரீதேவி சமீபத்தில் சாலையில் அடிபட்டு கிடந்த நபருக்கு முதலுதவி செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 6:33 pm
ஆந்திர மாநிலம் தடிக்கொண்டா தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் எம்.எல்.ஏ ஸ்ரீதேவி. இவர் ஒரு மருத்துவரும் ஆவார். இந்நிலையில், இவர் கடந்த வியாழக்கிழமை காலை 6 மணியளவில் குண்டூரிலிருந்து பிடுகுரல்லா சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
Samayam Tamil andhra accident


அப்போது லாரி மோதிய விபத்தில் சாலையில் படுகாயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை கண்டதும் தனது காரை நிறுத்தி விட்டு, படுகாயம் அடைந்த நபருக்கு முதலுதவி செய்து, பின்னர் காவலர் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து நடந்து சில நேரங்களாக ரத்த காயங்களுடன் கதறி இருந்த அந்த வாலிபரை போலீசாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தவாறே நின்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் எம்எல்ஏ ஸ்ரீதேவி போலீசாரை கடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவி தெரிவிக்கையில், கொரோனா வைரஸுக்குப் பயந்த உள்ளூர்வாசிகள் காயமடைந்த மனிதரை அணுகுவதற்கு சிறிதும் முயற்சி செய்யவில்லை. நான் உடனே என் வாகனத்திலிருந்து இறங்கி கையுறைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து காயமடைந்தவரை அணுகி நாடி துடிப்பை சரிபார்த்தேன். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பினேன்'' என கூறினார்.

ராகுல் -சச்சின் சந்திப்பு... சுபமாய் முடிவுக்கு வரும் ராஜஸ்தான் அரசியல் பஞ்சாயத்து?!

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து சமூக ஊடக வாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி