ஆப்நகரம்

நிர்வாண படத்தை பகிர்ந்த காதலன் மீது எஃப்ஐஆர்

சமூக வலைத்தளத்தில் தனது நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் காதலன் மீது மாடல் அழகி ஜூஹு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

TNN 20 Feb 2017, 12:12 pm
மும்பை: சமூக வலைத்தளத்தில் தனது நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் காதலன் மீது மாடல் அழகி ஜூஹு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil model lodges fir against ex for tweeting her nude picture
நிர்வாண படத்தை பகிர்ந்த காதலன் மீது எஃப்ஐஆர்


மாடல் அழகி தானே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வழக்கு மன்படாவில் உள்ள சிதால்சார் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க மாடல் அழகி, தன்னுடைய நிர்வாண புகைப்படம் பகிரப்பட்டது குறித்து தனது தோழி மூலம் அறிந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தேரியில் வசித்து வரும் அவரது முன்னாள் காதலன் இப்படத்தை பகிர்ந்துள்ளார் என்று ஜூஹு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாடல் அழகி அளித்துள்ள புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடன் இருந்த உறவை முறித்துக் கொண்டேன். அது முதலே தன்னை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் காதலித்து வந்தோம். அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை அவரது சொந்த சமூக வலைத்தள பக்கத்தில் இருந்தே பகிர்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல், பெண்ணை இணையத்தளம் மூலம் பயன்படுத்துதல், பெண்ணை பின்தொடரும் குற்றம், ஆபாசப் படத்தை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிடால்சார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

A model-actress lodged a complaint with Juhu police on Friday against her ex-boyfriend for posting her nude photo on Twitter and stalking her on social media. As she is from Thane, the case has been transferred to Chitalsar police station in Manpada, Thane.

அடுத்த செய்தி