ஆப்நகரம்

மோடி, அமித் ஷாவுக்கு குறிவைத்து இருக்கும் பயங்கரவாத அமைப்பு!!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெயஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு ஹிட் லிஸ்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 10:40 am
லக்னோவில் இருக்கும் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு கழகத்திற்கு அனுப்பி இருக்கும் மிரட்டல் கடிதத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மூவரையும் குறிவைத்து இருப்பதாக ஜெயஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Samayam Tamil Jaish


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு இவர்கள் மூவரும்தான் முக்கிய காரணம் என்றும் எனவே இவர்களை பழிக்கு பழி வாங்கும் செயலாக குறிவைத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், காந்திநகர், கான்பூர், லக்னோ உள்பட 30 நகரங்களை தாக்குவதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியை தாக்குவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ஹபீஸ் சயீத் தலைமையிலான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு வாரணாசியில் கால் பதிப்பதற்கு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அடுத்த கவுரவம்- அமெரிக்காவில் ’குளோபல் கோல்கீப்பர்’ விருது வாங்கிய பிரதமர் மோடி!

வாரணாசியில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு இருந்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறைவாசத்தில் ப.சிதம்பரம்... இன்று போல் என்றும் இருக்க வாழ்த்திய மோடி!

இதற்கிடையே, இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் நுழைவதற்கு பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இதனால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி