ஆப்நகரம்

ஹிட்லரைப் போல் கொடூரமானவர்கள் மோடியும், அமித்ஷாவும்; சித்தராமையா கடும் தாக்கு!

மோடி, அமித்ஷா குறித்து, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

Samayam Tamil 19 May 2018, 5:29 pm
பெங்களூரு: மோடி, அமித்ஷா குறித்து, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
Samayam Tamil Siddaramaiah


கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, எடியூரப்பா உருக்கமான பேச்சை சட்டசபையில் நிகழ்த்தினார்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்கும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வந்தார். இதன்மூலம் ஜனநாயக விரோதச் செயலுக்கு பின்னணியில் மோடி இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மேலும் ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது. கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிற்கு, அமித்ஷா மூலம் மோடி அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுநரின் செயல்பாட்டை ஜனநாயகப் படுகொலை என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

ஹிட்லர், கோபெல்ஸ் போன்ற சர்வாதிகாரிகளின் வடிவங்களாக மோடியும், அமித்ஷாவும் செயல்பட்டுள்ளனர். அதிகாரத்தால் வளைத்துப் போட முயற்சித்த போதிலும், நமது எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற முறைகேடான விஷயங்களால் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. இது ஜனநாயக வெற்றி என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Modi And Shah Are Vestiges Of Hitler Say Siddharamaiah.

அடுத்த செய்தி