ஆப்நகரம்

காகிதத்தை மிச்சப்படுத்த மக்கள் கையில் ஸ்டாம்ப் குத்தும் மோடி அரசு!

காகிதத்தை சிக்கனமாக பயன்படுத்து மத்திய அரசின் முயற்சியை கிண்டலடிப்பதா? மனிதத் தன்மை அற்ற மத்திய அரசின் இச்செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்’ என ஓமர் அப்துல்லா தன் டுவிட்டரில் பதிவிட்டு, ஜம்மு காஷ்மீர் குடிமகன் ஒருவரது சீல் குத்திய உள்ளங்கை படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2019, 12:28 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க மத்திய ஓர் புதிய சட்டத்தை வகுத்துள்ளது.
Samayam Tamil omar


அதிகரித்து வரும் காதித தட்டுப்பாடு காரணமாக இத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. காகித உபயோகத்தை குறைப்பதன் மூலமாக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது.

அதன்படி நெடுஞ்சாலையில் பயணிக்க உள்ளங்கையில் நீல மை சீல் குத்தப்படுகிறது.
இதற்கு முன்னர் காகித ஸ்லிப் வழங்கப்பட்டது. இந்த முறைக்கு ஓமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘இதுபோலத்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நெடுஞ்சாலையை பயன்படுத்த மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களது உள்ளங்கையில் மை ஸ்டாம்ப் குத்தப்படுகிறது. இதற்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. காகிதத்தை சிக்கனமாக பயன்படுத்து மத்திய அரசின் முயற்சியை கிண்டலடிப்பதா? மனிதத் தன்மை அற்ற மத்திய அரசின் இச்செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்’ என ஓமர் அப்துல்லா தன் டுவிட்டரில் பதிவிட்டு, ஜம்மு காஷ்மீர் குடிமகன் ஒருவரது சீல் குத்திய உள்ளங்கை படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி