திருட்டுத் தனம் செய்வோரை, புனிதர்கள் எனக் கூறி நாட்டு மக்களை மோசடி செய்யும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஆஸாத்பூர் மொத்த விலை காய்கறிச்சந்தையில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக, மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் சீர்திருத்தத்தைக் கண்டித்து, போராட்டம் நடத்தப்பட்டது. அதில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் மிகப்பெரும் நிதிநெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளதாக, விமர்சித்தார். ஏழை மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, பெரும் பணக்காரர்களை பாதுகாக்கும் பணிகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இது புரியாமல், மத்திய அரசு மிகப்பெரும் பொருளாதார தவறை செய்துள்ளதாக, மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதனால், சராசரி மக்களே பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை மேலும் நீடித்தால், நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சிகர சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. திருடர்களைப் புனிதர்கள் என்று கூறி, நாட்டு மக்களை மோசடி செய்யும் மோடியை கண்டித்து, தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்தார்.
இதேபோன்று, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பேசுகையில், நிதித்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை நிதியமைச்சராக நியமித்து, மோடி அரசு மிகப்பெரிய மோசடியை செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.
Chief Ministers Mamata Banerjee and Arvind Kejriwal today tore into Prime Minister Narendra Modi over demonetisation with the AAP chief asking the government to roll back it in three days while the TMC supremo said such a crisis was not seen even during Emergency.
தலைநகர் டெல்லியில் உள்ள ஆஸாத்பூர் மொத்த விலை காய்கறிச்சந்தையில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக, மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் சீர்திருத்தத்தைக் கண்டித்து, போராட்டம் நடத்தப்பட்டது. அதில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் மிகப்பெரும் நிதிநெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளதாக, விமர்சித்தார். ஏழை மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, பெரும் பணக்காரர்களை பாதுகாக்கும் பணிகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இது புரியாமல், மத்திய அரசு மிகப்பெரும் பொருளாதார தவறை செய்துள்ளதாக, மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதனால், சராசரி மக்களே பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை மேலும் நீடித்தால், நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சிகர சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. திருடர்களைப் புனிதர்கள் என்று கூறி, நாட்டு மக்களை மோசடி செய்யும் மோடியை கண்டித்து, தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்தார்.
இதேபோன்று, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பேசுகையில், நிதித்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை நிதியமைச்சராக நியமித்து, மோடி அரசு மிகப்பெரிய மோசடியை செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.
Chief Ministers Mamata Banerjee and Arvind Kejriwal today tore into Prime Minister Narendra Modi over demonetisation with the AAP chief asking the government to roll back it in three days while the TMC supremo said such a crisis was not seen even during Emergency.