ஆப்நகரம்

காஷ்மீர் விவகாரம் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து, பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

TNN 12 Jul 2016, 12:17 pm
டெல்லி: காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து, பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil modi in urgent meeting with collegues regarding kashmir issue
காஷ்மீர் விவகாரம் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை


ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, கலவரம் மூண்டது. இதில் 30 வரை உயிரிழந்தனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #WATCH PM Narendra Modi holds a meeting on law & order situation in Jammu and Kashmir, meeting underway.https://t.co/gmItUgKQEf— ANI (@ANI_news) July 12, 2016 இந்திய அரசால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அங்கு இரட்டை அரசியல் சூழல் நிலவுவதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

அடுத்த செய்தி