ஆப்நகரம்

வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவிலிருந்து வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.

Samayam Tamil 19 Sep 2018, 2:36 am
இந்தியாவிலிருந்து வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர்.
Samayam Tamil 201809181910594758_Modi-inaugurate-IndiaBangladesh-Friendship-Pipeline_SECVPF
வங்காளதேசத்துக்கு எரிபொருள் அனுப்பும் திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


கடந்தாண்டு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்த போது வங்காளதேசத்துக்கு குழாய்கள் மூலம் எரிபொருள் அனுப்பும் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி இந்தியாவிலிருந்து வங்கதேச நாட்டுக்கு 15 ஆண்டுகளுக்கு டீசல், இயற்கை எரிபொருள் எடுத்துச்செல்லப்படவுள்ளன.

முன்னதாக ரயில்கள் மூலம் எடுத்துச்செல்லப்படும் எரிபொருள், குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு, அதன் வழியாக டீசல் எரிபொருள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு வங்காள மாநிலத்தின் சிலிகுரி பகுதியிலிருந்து, வங்காளதேசத்துக்கு டீசல் மற்றும் இயற்கை எரிவாயு அனுப்பும் குழாய்களை இந்தியா அமைக்க உள்ளது. இதற்கான தொடக்க பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதில் முதற்கட்டமாக இருநாடுகளின் எல்லைக்கு இடையில் சுமார் 131 கி.மீ தொலைவுக்கு இந்த குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. மேலும் இதன் அடுத்தக்கட்ட பணிகள் மேற்கு வங்காளத்தின் தாத்தபுலியாவுக்கும், வங்காளதேசத்தின் குல்னா பகுதிக்கு இடையில் குழாய்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தொடக்க நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா காணொலி மூலம் பங்கேற்றார்.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து டோங்கி வரையிலும், டோங்கியில் இருந்து ஜாய்தேவ்பூர் வரையிலுமான இரட்டை வழித்தட ரெயில் பாதகளை அமைக்கும் பணிகளையும் இரு தலைவர்கள் இன்று தொடங்கி வைத்தனர்.

வங்காளதேசம் டாக்கவில் உள்ள தனது இல்லத்திலிருந்து இந்த நிகழ்வில் பங்கேற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, வரும் 28ம் தேதி பிறந்தநாள் காணும் ஷேக் ஹசீனாவுக்கு வங்காள மொழியில் பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறினார்.

அடுத்த செய்தி