டெல்லி :பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தன்னையும், தன் கட்சியை சேர்ந்தவர்களையும் கொலை செய்யும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ளார். இருவருக்கும் ஏற்பட்டுள்ள விரக்தியால் ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தன்னையும் கொலை செய்யவும் வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து தொடர்ந்து கைது செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும், எவரும் கொல்லப்படலாம் என்று வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். பஞ்சாப், குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதால் பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும், திட்டமிட்டு ஆம் ஆத்மியை சேர்ந்தவர்களை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக அரசால் ஆம் ஆத்மியை சேர்ந்த பத்து எம்எல்ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆம் ஆத்மியை அழிக்கும் வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். பாஜக எல்லா இடங்களிலும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. அதை இரண்டு வழிகளில் செய்ய இயலும். ஒன்று மக்களுக்கு நல்லது செய்து மக்கள் சக்தியை பெறமுடியும். ஆனால் அது அவர்களால் முடியாத ஒன்று. ஏனென்றால் மாணவர்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்று எல்லோரும் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். மற்றொரு வழியான எதிரே இருப்பவர்களை அழித்து பாஜக ஆட்சியை பிடிக்க பார்க்கிறது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக அரசால் ஆம் ஆத்மியை சேர்ந்த பத்து எம்எல்ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆம் ஆத்மியை அழிக்கும் வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். பாஜக எல்லா இடங்களிலும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. அதை இரண்டு வழிகளில் செய்ய இயலும். ஒன்று மக்களுக்கு நல்லது செய்து மக்கள் சக்தியை பெறமுடியும். ஆனால் அது அவர்களால் முடியாத ஒன்று. ஏனென்றால் மாணவர்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்று எல்லோரும் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். மற்றொரு வழியான எதிரே இருப்பவர்களை அழித்து பாஜக ஆட்சியை பிடிக்க பார்க்கிறது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.