ஆப்நகரம்

மனிதாபிமானம் நிறைந்த இந்திய ராணுவம்; பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்திய ராணுவ வீரர்கள் மனிதாபிமானத்தில் சிறந்து விளங்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

TNN 14 Oct 2016, 9:24 pm
உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்திய ராணுவ வீரர்கள் மனிதாபிமானத்தில் சிறந்து விளங்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi lauds human face of indian soldiers
மனிதாபிமானம் நிறைந்த இந்திய ராணுவம்; பிரதமர் மோடி பெருமிதம்


மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் இந்திய ராணுவ வீரர்களுக்காக, சவுரிய சமரக் என்ற பெயரில் அமைக்கப்பட்ட போர் நினைவுச்சின்னத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:

உலக அளவில் உள்ள ராணுவங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய ராணுவம் என்ற உடனே, அதன் மனிதாபிமான முகம்தான் நினைவுக்கு வருகிறது. உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின்போது, இந்திய ராணுவ வீரர்கள் உயிரை பொருட்படுத்தாமல், பல்வேறு இன்னல்களை சந்தித்து, ஏராளமான பொதுமக்களை உயிருடன் மீட்டனர்.

இதுபோல, இன்னும் பல மீட்புப் பணிகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சில நாடுகளில், ராணுவத்தினரை கொலை செய்ய மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலோ ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காக, ராணுவத்தை பயன்படுத்துகிறோம். இதனை பலவீனம் என்று யாரும் நினைக்கக்கூடாது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

English Summary:

The first image of a soldier may be that of a uniformed person with weapons, but soldiers also have a humane face, Prime Minister Narendra Modi said in Bhopal on Friday.

அடுத்த செய்தி