ஆப்நகரம்

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐடி துறை பெரும் பங்காற்றுகிறது: பிரதமர் மோடி புகழாரம்!!

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐ.டி துறை பெரும் பங்காற்றுவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2018, 10:33 pm
ஐ.டி துறையைச் சேர்ந்தவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐ.டி துறை பெரும் பங்காற்றுவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐடி துறை பெரும் பங்காற்றுகிறது: பிரதமர் மோடி புகழாரம்!!
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐடி துறை பெரும் பங்காற்றுகிறது: பிரதமர் மோடி புகழாரம்!!


நாடு முழுவதும் உள்ள ஐ.டி நிறுவனங்களின் தலைவர்கள், ஊழியர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐ.டித்துறை மிகப்பெரிய பங்காற்றுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள், தொழில்நுட்பத்தை தங்கள் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

சிறியதோ, பெரியதோ எந்த முயற்சியாக இருந்தாலும் மதிப்பளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் திட்டங்கள் தீட்டி, பணம் ஒதுக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தின் வெற்றி, மக்களின் பங்களிப்பிலேயே உள்ளது. இப்போது பலர் வரிக் கட்டத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால், அவர்களின் வரிப்பணம் முறையாக, மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

தூய்மை இந்தியாவின் சின்னமாக இருப்பது காந்தியின் கண்ணாடி. காந்தி நமக்கு ஒரு உத்வேகமாக உள்ளார். அவரின் லட்சியத்தையே நாம் நிறைவேற்றுகிறோம்,” என தெரிவித்தார். தொடர்ந்து, சமூக மாற்றத்திற்காக ஐடி நிறுவனங்களையும், ஊழியர்களையும் ஒன்றிணைக்கும் ‘Self4Society’ என்ற இணையதளத்தையும், ‘Main Nahin Hum’ மொபைல் ஆப்பையும் தொடங்கி வைத்தார்.

அடுத்த செய்தி