ஆப்நகரம்

உருது கற்கும் பிரதமர் மோடி!

பாகிஸ்தான் அரசு புரிந்து கொள்ளும் வகையில் பதிலளிப்பதற்காக தானும்,தனது அமைச்சர்களும் உருது கற்று வருவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TNN 4 Aug 2016, 10:00 pm
பாகிஸ்தான் அரசு புரிந்து கொள்ளும் வகையில் பதிலளிப்பதற்காக தானும்,தனது அமைச்சர்களும் உருது கற்று வருவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil modi learns urdu to answer pakistan
உருது கற்கும் பிரதமர் மோடி!



பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல கடுமையான கருத்துக்களை கூறி வருகிறார்.காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் வானி ஒரு தியாகி என நவாஸ் ஷெரிப் புகழ்ந்ததிலிருந்து,மோடியின் பாகிஸ்தான் எதிர்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.இதன் ஒரு பகுதியாகத்தான்,இன்று பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை சரமாரியாக தாக்கி பேசினார்.இதனால் அவரின் பேச்சை ஒளிபரப்பு செய்வதற்கு கூட அந்நாட்டு ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு புரியும் வகையில் பதில் கூறுவதற்காக உருது மொழி கற்றுவருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

”நானும் எனது அமைச்சர்களும் குறிப்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் கடந்த 2 மாதங்களாக உருது கற்று வருகிறோம். பாகிஸ்தானுக்கு எளிதில் புரியும் வகையில் அவர்கள் மொழியிலேயே பதில் கூறுவதற்காக உருது கற்று வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி