ஆப்நகரம்

கேரளாவில் மழை பாதிப்பை பார்வையிட புறப்பட்டார் பிரதமர் மோடி!!

கேரளாவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட பிரதமர் மோடி, கேரளாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2018, 11:36 pm
கேரளாவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட பிரதமர் மோடி, கேரளாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Samayam Tamil கேரளாவில் மழை பாதிப்பை பார்வையிட புறப்பட்டார் பிரதமர் மோடி!!
கேரளாவில் மழை பாதிப்பை பார்வையிட புறப்பட்டார் பிரதமர் மோடி!!


கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக, இதுவரையில் 324 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனார்.

கேரளாவில் உள்ள கொச்சி விமானநிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், வரும் 26 ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அரசியல் கட்சிகள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தற்போது கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி