ஆப்நகரம்

“மோடி மருத்துவமனை போட்டோஷூட் பொய்” நெட்டிசன்கள் ஆதாரங்கள்...

மோடி லடாக் சென்றது நாட்டின் பாதுகாப்புப் பணியின் முக்கியப் பங்கு எனக் குரல்கள் எழுந்து வந்த நிலையில், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது...

Samayam Tamil 4 Jul 2020, 1:57 pm
மத்திய அரசு வெளியிட்ட ராணுவ வீரர்கள் நலம் விசாரிப்பு புத்தகத்தைப்படும் போலி எனக் குறிப்பிட்டு, அதற்கு ஆதாரங்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியும் இதே ஆதாரங்களைக் குறிப்பிட்டு மோடியைச் சாடத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil “மோடி மருத்துவமனை போட்டோஷூட் பொய்” நெட்டிசன்கள் ஆதாரங்கள்...
“மோடி மருத்துவமனை போட்டோஷூட் பொய்” நெட்டிசன்கள் ஆதாரங்கள்...


இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் சூழலில், பிரதமர் மோடி லடாக் பகுதிக்குச் சென்று ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றினார். மோடியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உள்படப் பலர் பாராட்டி வந்தனர்.
ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய மோடி, கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்களைச் சந்தித்தார் எனச் செய்திகள் வெளியாகியது. இது தொடர்பாக சில புகைப்படங்களும் மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் பொய் எனக் கூறப்பட்டு சில ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பொய் எனக் குறிப்பிடுவதற்கு முக்கிய ஆதாரமாக மோடி நலம் விசாரித்த புகைப்படங்களில் உள்ள பின்னணி காட்சிகள் குறிப்பிடப்படுகிறது.

நெட்டிசன்கள் காட்டும் ஆதாரம்


ஆம், ராணுவ மருத்துவமனை எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில் புரோஜெக்டர் ஒன்று உள்ளது. இந்த புரோஜெக்டர் எப்படி மருத்துவமனை மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் எனக் கேள்வி எழுகிறது. அதேபோல் அந்த மருத்துவமனை புகைப்படங்கள் ஒன்றில்கூட மருத்துவ உபகரணங்களோ, மருந்துகளோ இல்லை என்பதும் சர்ச்சை கிளம்பியதற்கான காரணம்.

புரோஜெக்டர் ஆதாரம்


அதேபோல் இந்த குறிப்பிட்ட புகைப்படங்கள் வெளியான படம் எங்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனிக்கு, 2011ஆம் ஆண்டு சிறப்பு ராணுவ லெப்டினண்ட் கலோனல் பதவி வழங்கப்பட்டது.

லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது என்ன? - இதோ முழு விவரம்!

இந்த பதவியை ஏற்ற அவர் ராணுவ வீரர்களோடு தங்கி பயிற்சிகள் மேற்கொண்டார். அப்போது அவர் ராணுவ வீரர்களோடு எல்லையில் உணவு அருந்தினார் என சில புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படத்தில் பின்னணியிலிருந்த காட்சிகள் மோடி மருத்துவமனை புகைப்படத்திலும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், “மோடி பொய் சொல்வதற்காகவே பிறந்தவர். முதலில் இந்தியாவின் எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்றார். இப்போது சீனா தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவத்தினரைச் சந்தித்தாக போட்டோக்கள் வெளியிட்டுப் பொய் சொல்லுகிறார். இந்த நேரத்தில் நம் இந்திய ராணுவத்தில் பலமாகத் தாக்கப்பட்டுள்ளனரா? என்ற அச்சம் எங்களுக்குத் தோன்றுகிறது” என்கிறார்கள்.

இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இதுவரை பாஜக தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அடுத்த செய்தி