ஆப்நகரம்

ஒவ்வொரு 3 கி.மீ.க்கும் ஒரு சாா்ஜிங் ஸ்டேஷன்: விரைவில் வருகிறது புதிய திட்டம்

மின்னணு வாகனங்களை பெருமளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ள நிலையில் ஒவ்வொரு 3 கி.மீ. ஒரு சாா்ஜிங் ஸ்டேஷன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 17 May 2018, 6:28 pm
மின்னணு வாகனங்களை பெருமளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ள நிலையில் ஒவ்வொரு 3 கி.மீ. ஒரு சாா்ஜிங் ஸ்டேஷன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil electriccharge-1526474948


உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் காா்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் காா்கள் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில் இந்தியாவிலும் மஹிந்திரா, டாடா போன்ற முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இப்பிரிவில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறது. இதில் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே பலஎலக்ட்ரிக் காா்களை தயாாித்து சந்தைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

வல்லரசு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் எலக்ட்ரிக் காா்களை பயன்படுத்த ஏதுவான தளத்தை அமைத்துத் தரும் வகையில் பிரதமா் மோடி தலமையிலான மத்திய அரசு புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.

நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் ஸ்மாா்ட் சிட்டிகளில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும் சாா்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்துள்ளது இதேபோல் எப்போதும் பிசியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்திற்கும் சாா்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்துள்ளது.

இத்தகைய சாா்ஜிங் ஸ்டேஷன் அமைக்க விரும்பும் மக்களுக்கு நகராட்சியிடம் இருந்து நிலத்தை அளிக்கவும், தளத்தை அமைப்பதற்காக கருவிகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை மானிய விலைக்கு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 3-5 வருடத்திற்கு 30 ஆயிரம் ஸ்லோ சாா்ஜிங் ஸ்டேஷன், 15 ஆயிரம் பாஸ்ட் சாா்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி