ஆப்நகரம்

குஜராத்தை கலக்கும் மோடி குல்ஃபீ ஐஸ்கிரீம்- விறபனை நாளை வரை மட்டுமே

மீண்டும் இந்தியாவின் பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் வெற்றியை பலரும் வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் மோடி உருவம் பொறித்த ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது.

Samayam Tamil 29 May 2019, 6:43 pm
மக்களவைத் தேர்தலில் பாஜக-வின் வெற்றியை கொண்டாடும் விதமாக நரேந்திர மோடியின் முகம் வடிவிலான குல்ஃபி ஐஸ்க்ரிம் விற்பனை குஜராத்தில் கலை கட்டி வருகிறது.
Samayam Tamil 50 சதவீத ஆஃபரில் விற்பனைக்கு வந்த மோடி குல்ஃபீ ஐஸ்கிரீம்
50 சதவீத ஆஃபரில் விற்பனைக்கு வந்த மோடி குல்ஃபீ ஐஸ்கிரீம்


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 349 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

இதனால் நாளை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி. இவரது பதவியேற்பு விழா நாளை இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கிறது.

மக்களவையில் பாஜக-வின் வெற்றியை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் உள்ள சூரத் நகரில் செயல்படும் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று பாஜக-வின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடி வருகிறது.

நரேந்திர மோடியின் உருவம் பொறித்த வகையில் குல்ஃபி ஐஸ் கிரீம்களை வடிவமைத்து இந்த பார்லரில் விற்கப்படுகிறது. இந்த ஐஸ்கிரீமை வாங்கிச் சாப்பிடும் மக்கள், சாப்பிடுவதற்கு வித்தியாசமாகவும், மிகவும் சுவையாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய ஐஸ்கிரீம் பார்லரின் உரிமையாளர் விவேக் அஜ்மீரா,
முழுக்க முழ்க்க இயற்கையான பொருட்களால் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. மொத்தமாக 200 மோடி குல்ஃபீ ஐஸ்கிரீம்களை தயாரிக்க 24 மணி நேரம் தேவைப்படுகிறது என்றார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் வரை தான் மோடி குல்ஃபி ஐஸ்கிரீம் விற்கப்படவுள்ளது. மோடி சிட்டாபல் குல்ஃபி என பெயரிடப்பட்டுள்ள இந்த குல்ஃபி 50 சதவீத ஆஃபரில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், மோடி பிரதமராக பதவியேற்கும் வரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இலவச சேவையை அளித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்த மே 23ம் நாளை மோடி தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் பாஜக-வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி