ஆப்நகரம்

கொரோனா பாதிப்பா: மோடியின் உரைகளைப் படியுங்கள்

கொரோனா பாதித்தவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் படிக்க மோடியின் உரைகள் வழங்கப்படும் ....

Samayam Tamil 18 Mar 2020, 10:47 pm
அரசு ஏற்படுத்தியிருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு பிரதமர் மோடியின் பேச்சுகள் அடங்கிய தொகுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil modi welcoming


நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களைத் தனிமைப்படுத்தி வைக்க அரசுத்தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் சேர்த்து அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் அடங்கிய தொகுப்பையும் தரப்போவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கேட்டபோது, “பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பொதுவாக இந்த உரைகளின் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல இவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ”என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவைப் பயன்படுத்தி நூதன மோசடி

ஆனால், எந்த விதத்தில் இந்த முடிவு சரியானதாக இருக்கும் என்பதற்கான காரணங்கள் ஏதும் இதுவரை விளக்கப்படவில்லை. மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையிலேயே எளிதில் குணப்படுத்த முடிகிற நோயாக இருக்கும் கோவிட்19 மீதான அச்சத்தை மேலும் மேலும் அதிகரிப்பதாகத்தான் இந்த நடவடிக்கையைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

அடுத்த செய்தி