ஆப்நகரம்

மனிதநேயப் போரில் இணைந்து வெல்வோம்... சர்வதேச கொரோனா நட்பு

சட்டென்று தொனி மாற்றிய அமெரிக்க அதிபர், “அசாதாரண சூழ்நிலைகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த முடிவை அமெரிக்கா என்றும் மறக்காது. இந்தியாவுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

Samayam Tamil 9 Apr 2020, 11:23 am
கொரோனாவுக்கு எதிரான மனிதநேயப் போரில் நாம் இணைந்து வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi tweeted to trump that india shall do everything possible
மனிதநேயப் போரில் இணைந்து வெல்வோம்... சர்வதேச கொரோனா நட்பு


ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மிரட்டல் தொனியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டதன் விளைவாக, மனிதநேய அடிப்படையில் மருந்தைத் தர இந்தியா ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து, சட்டென்று தொனி மாற்றிய அமெரிக்க அதிபர், “அசாதாரண சூழ்நிலைகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்த முடிவை அமெரிக்கா என்றும் மறக்காது. இந்தியாவுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இந்தியா செய்த உதவியை அமெரிக்கா மறக்காது என்று வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய ட்ரம்ப், இந்தியா எடுத்த இந்த முடிவை அமெரிக்கா மறக்காது என்று ட்வீட் செய்திருந்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

கொரோனா, உள்ளேன் ஐயா! கோவிட், யெஸ் சார்!


இதனை வரவேற்று பதிலளித்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, “உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். நாம் இணைந்து கொரோனாவுக்கு எதிரான மனிதநேயப் போரில் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரத்தால் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவின் மீது பல்வேறு பார்வைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் கடந்து நட்பு ரீதியாக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் ஆரோக்கியமான உறவு இருப்பதாகவே இந்தப் பதிவுகள் காட்டுகின்றன.

அடுத்த செய்தி