ஆப்நகரம்

வார்த்தை ஜாலம் காட்டும் மோடி; செயலில் ஒன்றும் கிடையாது: புள்ளிவிவரம் கூறும் கதையை கேளுங்க!

மூன்று ஆண்டு கால மோடி ஆட்சியில், வாக்குறுதிகள் மட்டுமே பலப்பட்டுக் கொண்டு வந்துள்ளதாகவும், செயலில் ஒன்றும் கிடையாது என்றும் கூறப்படுகிறது.

TNN 12 Oct 2017, 12:12 am
கேன்பெர்ரா: மூன்று ஆண்டு கால மோடி ஆட்சியில், வாக்குறுதிகள் மட்டுமே பலப்பட்டுக் கொண்டு வந்துள்ளதாகவும், செயலில் ஒன்றும் கிடையாது என்றும் கூறப்படுகிறது.
Samayam Tamil modis actions fail to live up to his words
வார்த்தை ஜாலம் காட்டும் மோடி; செயலில் ஒன்றும் கிடையாது: புள்ளிவிவரம் கூறும் கதையை கேளுங்க!


கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியேற்றது. அப்போதைய தேர்தல் பிரச்சாரம் முதல் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான சந்திப்பு வரை, பிரதமர் மோடி சுமார் 7000 சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளார். அதன் மூலம் குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச ஆட்சி என்ற வகையில் இந்தியா மாற்றம் கண்டுள்ளதாக மோடி கூறி வருகிறார். இருப்பினும், உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, எளிதில் வியாபாரம் தொடங்க ஏதுவாக அமையும் நாடுகளின் பட்டியலில், 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவிற்கு 130வது இடமே கிடைத்துள்ளது. மூன்று ஆண்டு கால மோடி ஆட்சியை சுருங்க குறிப்பிட வேண்டுமென்றால், அதிக வாய்ச்சவடால் மற்றும் குறைவான செயல்பாடு என்றவாறே காணப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட்ட ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான ஊடுருவல் தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தகர்த்தது. இதுபோன்று ஏராளமான தாக்குதல்கள் முந்தைய ஆட்சிகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிற்கெல்லாம் இந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்படவில்லை. இந்த விளம்பர செயல்பாட்டை யாராவது கண்டிக்கும் வகையில் பேசினால், உடனே அவர்கள் தேச விரோத சக்திகள் என்று பெயர் சூட்டப்படுகிறார்கள்.

இதையடுத்து நவம்பர் 8ஆம் தேதி, கருப்பு பணத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடுக்கப்பட்டது. அப்போதைய நிதிப் பயன்பாட்டின்படி, 86% புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டன. பணமதிப்பிழப்பு விவகாரம், மோடியின் மூர்க்கத்தனமான அதிகாரத் தலைமையை வெளிப்படச் செய்தது.

இதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் குறித்த இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடையச் செய்ததோடு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு ஒரு அரசியல் சூதாட்டமாகவே கருதப்பட்டு, மோடி தேசிய தலைவர் அல்ல என்றும், கட்சி அரசியல்வாதி என்றும் நிரூபித்தது. மேலும் மாநில அதிகாரத்தை ஒருங்கிணைத்து, மத்தியில் வலுவடையச் செய்வதில் மோடி உறுதியாக செயல்பட்டார்.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பலன் தரவில்லை என்று தான் கூறவேண்டும். ரியல் எஸ்டேட், பங்குகள், நகை, வெளிநாட்டு வங்கிக் கணக்கு ஆகியவற்றின் மூலம் முறைகேடான வருமானம் பெறப்பட்டதில் 96% கருப்பு பணம் மீட்கப்படவில்லை. லஞ்சமும், மிரட்டி பணம் பறித்தலும் பொதுவெளியில் நடந்து வரும் சூழலில் லஞ்சம் எந்தவகையிலும் ஒழிந்தபாடில்லை. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.

பணமதிப்பிழப்பு விவகாரத்தின் சுமையானது, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் தோள்களில் பெரும் சுமையாக அமைந்தது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், வல்லுநர்கள் கருத்துக்கணிப்பின் படி, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி ஆண்டிற்கு 0.4% ஆக மட்டுமே உள்ளது.

Modi’s actions fail to live up to his words.

அடுத்த செய்தி