ஆப்நகரம்

கன்னியாஸ்திரி விவகாரம்: செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்

கன்னியாஸ்திரி பாலியல் புகார் குறித்து கருத்து கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் எரிச்சலடைந்த நடிகர் மோகன்லால் அதற்காக ஃபேஸ்புக்கில் மன்னிப்பு கேட்டு பதவிட்டுள்ளார்.

Samayam Tamil 17 Sep 2018, 3:10 am
கன்னியாஸ்திரி பாலியல் புகார் குறித்து கருத்து கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் எரிச்சலடைந்த நடிகர் மோகன்லால் அதற்காக ஃபேஸ்புக்கில் மன்னிப்பு கேட்டு பதவிட்டுள்ளார்.
Samayam Tamil file70xomkxd1me137cuukpn153114
கன்னியாஸ்திரி விவகாரத்திற்கு கருத்து கூற மறுப்பு- மன்னிப்பு கேட்ட மோகன்லால்


பெருமழை வெள்ளத்தால் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவை புணரமைக்க வெளிநாடுகளில் வாழும் மலையாள மக்கள் பங்கேற்ற வட்டமேஜை கருத்தரங்கத்திற்காக மோகன்லால் ஏற்பட்டு செய்திருந்தார்.

அப்போது நடைபெற்ற சந்திப்பில் செய்தியாளர்கள் அவரிடம் கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதனால் எரிச்சல் அடைந்த மோகன்லால் செய்தியாளர்களிடம் கடுமை காட்டினார்.

இந்த விவகாரம் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியானதும், மோகன்லாலின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாஸ்திரி விவாகரம் தொடர்பாக கருத்து கொடுக்கும் மனநிலையில் இல்லை. எனது கடுமையான செயலால் கேள்வி எழுப்பிய நிருபரின் மணம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பதிவில் நடிகர் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி