ஆப்நகரம்

மருத்துவ ஊழியர்களுக்கு சம்பளத்தை நேரத்துக்குக் கொடுங்க: உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ​

Samayam Tamil 18 Jun 2020, 5:13 pm
கொரோனா தொற்று உருவான காலத்திலிருந்தே உலகம் முழுக்க பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள். இவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இழுபறி நிலவுவதாக எழுந்த தகவல்களையடுத்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
Samayam Tamil கோப்புப்படம்



அதன்படி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (எம்.எச்.எஃப்.டபிள்யூ) பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 (டி.எம்.ஏ) இன் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்க அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களையும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது, மேலும் இதை மீறுவது பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும்.


மேலும் சம்பளத்தை நிலுவையில் வைக்கும் மருத்துவமனைகள் / நிறுவனங்கள் / அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி COVID-19 நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தல் மற்றும் அவர்களின் சம்பளம் தொடர்பான வழிமுறைகளை நிறைவேற்றுமாறும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி